02-05-2020, 06:50 AM
விவசாயமே நம் உயிர் மூச்சு
வறண்ட நிலத்தை நீர் பாய்ந்து உழுது களை எடுத்து
பயிரிட்டு உரமிட்டு பயிர் வளர்த்து உணவு தரும்
நம் (முதுகெலும்பு) விவசாயி
அன்றோ அவன் ஒரு மேதை
இன்றோ அவன் ஒரு ஏழை ...
உணவு தரும் தெய்வத்திற்கு உணவு இல்லை என்றால்
நம்நாடு எதை நோக்கி செல்கிறது சிந்தியுங்கள்...
விவசாயத்தைக் கற்றுக் கொண்டு பயிர்களை வளர்க்க
பின்வரும் சந்ததியர்களுக்கு கற்றுத் தந்து
நாட்டை வளமாகவும் செழிப்பாகவும் மாற்றுங்கள்
நம் உயிர் மூச்சு விவசாயம் விவசாயம்இன்றி
உணவும் இருக்காது நம் (உயிரும்) வாழ்வும் இருக்காது
என்ற உண்மையை உணர்ந்து புதியதோர் விடியலாய்
இயற்கை விவசாயம் இந்த நாட்டில் பரவலாய் மலரட்டும்...